மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2026-08-16 13:42 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட வண்டலூர் பைபாஸ்-மாங்காடு செல்லும் சாலை ஓரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இப்பகுதியில் உள்ள சிலர் வாகனங்களில் குப்பைகளை கொண்டு வந்து சாலை ஓரத்தில் கொட்டிச் செல்கின்றனர். இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகளால் அப்பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரத்தில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட நகராட்சித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்