குப்பைக்கு தீ வைப்பதால் அவதி

Update: 2025-06-29 09:00 GMT


சேவூர் - கோபி பிரதான நெடுஞ்சாலை சேவூர் வடக்கு வீதி முத்துக்குமாரசாமி ஜீவசமாதி முன்பு பழமையான புளியமரங்கள் சாலையோரம் நிழல் தரும் பழமையான பெரிய மரங்களாக உள்ளன. மரத்தின் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே உரிய நடவக்கை எடுப்பதோடு குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமச்சந்திரன், சேவூர்.

மேலும் செய்திகள்