சுகாதார சீர்கேடு

Update: 2025-06-08 07:50 GMT

கோவை தலைமை தபால் நிலையம் அருகே பள்ளி முன்பு குப்பைகள் கொட்டப்படுகிறது. அங்கு முறையாக குப்பைகள் அகற்றப்படுவதும் இல்லை. இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். மீண்டும் குப்பைகள் கொட்டாமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்