சாலையோரம் வீசப்பட்ட குப்பை தொட்டிகள்

Update: 2024-09-15 17:47 GMT

ஏரியூர் நகர் பகுதியில் குப்பைத்தொட்டிகளை பயன்படுத்தி குப்பைகளை சேகரிக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கடைவீதி மற்றும் நகர் பகுதியில் குப்பை தொட்டிகளை வைக்காமல், ஊருக்கு ஒதுக்குப்புறமாக சாலை ஓரம் குப்பை தொட்டிகளை வீசி உள்ளனர். இதனால் குப்பை தொட்டிகள், துருப்பிடித்து, வீணாகும் நிலையில் உள்ளது. எனவே சாலையோரம் வீசப்பட்ட குப்பை தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

-கார்த்திகேயன், பட்டக்காரன் கொட்டாய்.

மேலும் செய்திகள்