பயன்படாத குப்பை தொட்டி

Update: 2024-09-01 17:23 GMT

ஊத்தங்கரை ஒன்றியம் கதவணி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் குப்பை தொட்டிகளை பயன்படுத்தாமல் சாலையோரம் கவிழ்த்்து போடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலையை கடக்கும் போது பொதுமக்கள் மூக்கை மூடியவாறு செல்கின்றனர். எனவே சாலையோரம் பயன்பாடியின்றி கவிழ்த்து போடப்பட்டுள்ள குப்பை தொட்டியை சரி செய்து சாலையோரம் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலையோரம் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாமிநாதன், கதவணி.

மேலும் செய்திகள்