குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-08-11 17:08 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே அஜ்ஜனஅள்ளி ஊராட்சியில் உள்ள சிகரலஅள்ளி கிராமத்தில் 300-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு போதிய தூய்மை பணியாளர்கள் இல்லை. இங்கு குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் சாலையோரங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன்கருதி குப்பை தொட்டிகள் வைக்கவும், போதிய தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

-முத்துக்குமார், சிகரலஅள்ளி.

மேலும் செய்திகள்