குப்பை தொட்டி வேண்டும்

Update: 2024-07-07 17:57 GMT

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே ஒரு சிலர் குப்பைகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் காற்று அதிகமாக வீசும் போது பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகளில் உள்ள கவர்கள் பரவுகின்றன. எனவே பள்ளி வளாகம் அருகே குப்பை தொட்டியை வைத்து குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.

-ஞானவேலன், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்