நோய் பரவும் அபாயம்

Update: 2024-05-05 18:13 GMT

கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை செல்லும் சாலையில் கிருஷ்ணகிரி அணை பகுதியான திண்ணகழனி அருகில் இறைச்சி கடைகளில் வெட்டப்படும் இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த பகுதியில் மூட்டை, மூட்டையாக கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நீர் நிலைகள் அசுத்தம் அடைவதுடன், சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனிமுருகன், திண்ணகழனி.

மேலும் செய்திகள்