கடும் துர்நாற்றம்

Update: 2024-05-05 12:46 GMT

கோவை மாநகராட்சி 31-வது வார்டு கணபதி ரத்னபுரி பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதனருகில் பள்ளிக்கூடமும் உள்ளது. அந்த வழியாக சென்று வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. அந்த அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இனிமேலாவது நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்