குப்பைக்கு தீ வைப்பதால் பொதுமக்கள் அவதி

Update: 2024-04-07 10:10 GMT

தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பள்ளிக்கு செல்லும் சாலையோரம் குப்பைகள், முடிகள் கொட்டப்படுகிறது. இவற்றுக்கு இரவு நேரம் தீ வைக்கப்படுவதால் அந்த புகை அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகளும், நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இங்கு குப்பை மற்றும் முடியை ெகாட்டி தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்