குப்பைகள் எரிக்கப்படுவது தடுக்கப்படுமா?

Update: 2024-02-11 16:37 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மூங்கில் மடுவு அரசு தொடக்கப்பள்ளியின் நுழைவாயிலில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் போடப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அப்படியே தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்களும், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் குப்பைகளை வைத்து எரிப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பழனிசாமி, ஏரியூர்.

மேலும் செய்திகள்