சுகாதார சீர்கேடு

Update: 2024-01-14 18:53 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. குப்பைகளை கால்நடைகள் கிளறி விடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சாலையோரத்தில் குப்பைகளை கொட்டடாமல் அதற்குரிய இடத்தில் கொட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாலாஜி, கல்லாவி.

மேலும் செய்திகள்