கால்வாயில் குப்பைகள்

Update: 2023-12-31 10:43 GMT

கோவை சவுரிபாளையம் இந்திரா நகரில் கால்வாயில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதை யாரும் அகற்ற முன்வருவது இல்லை. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மேலும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி வருகிறது. எனவே குப்பைகளை அகற்றி கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்