சுகாதார சீர்கேடு

Update: 2023-11-26 17:21 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்தனூர் சித்தர் கோவில் அருகே சாலையோரமாக கோழி கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு வருகிறது. அந்த வழியாக செல்லும் தெருநாய்கள் அதனை இழுத்து சென்று சாலையின் பல இடங்களில் போட்டு விட்டு செல்கின்றது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் கோழி கழிவுகள் அனைத்தும் முறையாக அப்புறப்படுத்தாத கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சிவராஜ், அத்தனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்