சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-09-24 08:15 GMT

நாகர்கோவில் சற்குணவீதியில் வறீது தெரு உள்ளது. இந்த தெருவில் இரவு நேரம் வேறு பகுதியில் உள்ள சிலர் வீடு, கடை, ஓட்டல்களில் உள்ள கழிவுகளை சாலையோரம் கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் சாலையோரம் கழிவுகளை கொட்டுவதை தடுப்பதுடன், அங்கு எச்சரிக்கை பதாகைகளை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-பவுஸ்டின், சற்குணவீதி. நாகர்கோவில்.

மேலும் செய்திகள்