நச்சுப்புகையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-21 13:26 GMT

காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே சாலையோரம் மர்மநபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் நச்சுப்புகை எழுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நச்சுப்புகையால் மூச்சுத்திணறி அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் சாலையோரம் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்