ஆற்றில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்

Update: 2022-10-19 12:32 GMT

குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பு பகுதியில் லட்டு விநாயகர் கோவிலுக்கு சற்று அருகில் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் கடந்த சில நாட்களாக இரவில் மருத்துவக் கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி விட்டு செல்கின்றனர். அதில் பயன்படுத்தப்பட்ட மருந்துகள், ஊசிகள் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ரத்தம் தோய்ந்த மருத்துவக் கழிவுகள் ஏராளமாக வீசப்பட்டுள்ளது. அதன் அருகில் சென்றால் துர்நாற்றம் வீசுகிறது. மருத்துவக் கழிவுகளை ஆற்றில் வீசும் நபர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பாபுபாலாஜி, குடியாத்தம்.

மேலும் செய்திகள்