சுகாதார சீர்கேடு

Update: 2023-06-07 13:49 GMT

வந்தவாசியில் 2 பஸ் நிலையங்கள் உள்ளன. எனினும், 2 பஸ் நிலையங்களும் தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எம்.எல்.ஏ. அலுவலகம், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பழைய பஸ் நிலையம் வந்து தான் செல்ல வேண்டும். அப்படி இருந்தும் பஸ் நிலைய பகுதி சுகாதார சீர்கேடாக உள்ளது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இயற்கை உபாதையை கழிக்கும் இடமாக உள்ளது. குப்பைகள் குவியல் குவியலாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திருவேங்கடம், மேல்பாதி.

மேலும் செய்திகள்