கால்வாயில் வீசப்படும் குப்பைகள்

Update: 2024-05-26 19:35 GMT

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி பகுதியில் பாலாற்றங்கரை செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் ஏராளமான குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மூட்டைகளில் துணிகள் வீசப்பட்டு கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் சீராக செல்லவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயில் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், வேலூர். 

மேலும் செய்திகள்