தெருவில் சிதறி கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-30 16:21 GMT

வேலூர் மாநகராட்சியாக மாறிவிட்ட பின்னர் குப்பைத் தொட்டிகள் இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தெருக்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாமல் வீடுகள் தோறும் சென்று ஊழியர்கள் குப்பைகளை சேகரித்துச் செல்கின்றனர். ஆனால் குப்பைகளை ஊழியர்களிடம் கொடுக்க இயலாத பொதுமக்கள் தெருவில் கொட்டி வருகின்றனர். இதனால் தெருக்களில் குப்பைகள் சிதறி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சத்துவாச்சாரி அன்புநகர் 2-வது தெருவில் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி உள்ளனர். அந்தக் குப்பைகள் நடுரோடு வரை சிதறி கிடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன்ராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்