குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்

Update: 2023-10-29 17:13 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் அருகில் உள்ள தென் மற்றும் வட ஒத்தவாடை தெருவில் குப்பைகள், கழிவுகள் அதிகளவில் தேங்கி காணப்படுகிறது. இதை கண்டு கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

-அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்