குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்

Update: 2023-07-23 12:48 GMT

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர். கோவில் அருகில் உள்ள அம்மணி அம்மன் கோபுரம் எதிரில் உள்ள தெருவிலும், வட மற்றும் தென் ஒத்தவாடை தெருக்களில் உள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து, பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் சிதறி கிடக்கின்றன. எனவே இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்