சாலையோரம் குவித்துள்ள குப்பைகள்

Update: 2023-02-08 17:15 GMT

வாணியம்பாடி பைபாஸ் சாலையில் 2 மருத்துவமனைகள், ஆளும் கட்சி மாவட்ட அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. இந்த இடத்தில் குப்பைகளை கொண்டு வந்து மலைபோல் குவித்து வைத்துள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும், அதேபோல் வெளியூரில் இருந்து கட்சி அலுவலகத்துக்கு வருவோர் அந்த வழியாக போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் பைபாஸ் சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் பயணிக்கின்றனர். குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மக்கள் நலன் கருதி இங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

-எல்.கார்த்திகேயன், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்