குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-07-30 16:55 GMT

வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் உழவர் சந்தை, நகர்ப்புற சுகாதார நிலையம், அம்மா உணவகம் உள்ளிட்டவைகள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் உழவர் சந்தைக்கு வந்து செல்கிறார்கள். இங்குள்ள சுகாதார நிலையத்துக்கு கர்ப்பிணிகளும் வருகிறார்கள். இந்தப் பகுதியில் மலை போல் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் அகற்ற முன்வர வேண்டும்.

-சிகாமணி, வாணியம்பாடி.

மேலும் செய்திகள்