குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-09-16 11:17 GMT

ஆரணி தாலுகா முள்ளிப்பட்டு கிராமம் அண்ணா தெருவில் சிறுமின்விசை தொட்டி உள்ளது. அதன் அருகில் குப்பைத்தொட்டியை வைத்துள்ளனர். அதில் அங்குள்ள மக்கள் குப்பைகளை எடுத்து வந்து கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளை சம்பந்தப்பட்டவர்கள் அகற்றவில்லை. குப்பைகளால் தொட்டி நிரம்பி வழிகிறது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீர் பிடிக்க வரும் பெண்கள் முகம் சுளிக்கிறார்கள். குடிநீர் தொட்டி அருகிலேயே வைத்துள்ள குப்பைத்தொட்டியை சற்று தூரத்தில் வைக்க வேண்டும். இல்லையேல், தினமும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

-எஸ்.சந்திரசேகரன், முள்ளிப்பட்டு. 

மேலும் செய்திகள்