பெரியார் பூங்காவில் குப்பைகளை கொட்டும் அவலம்

Update: 2022-10-30 10:53 GMT

வேலூர் தெற்குக் காவல் நிலையம் எதிரே உள்ள பெரியார் பூங்கா கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு, கிடப்பில் உள்ளது. இதனால் பொதுமக்கள் ஒருசிலர் சுவரைத் தாண்டி உள்ளே சென்று வருகின்றனர். மேலும் மாநகராட்சி ஊழியர்கள் ஒரு சிலர் அப்பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை பெரியார் பூங்கா உள்பகுதியில் கொட்டி தீ வைக்கின்றனர். எனவே பூட்டப்பட்டுக் கிடக்கும் பெரியார் பூங்காவை பயனுக்குக் கொண்டு வந்தால் இது போன்ற செயல்களை தவிர்க்கலாம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்