சுடுகாட்டில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-09-22 12:35 GMT

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் திருப்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. தற்போது அந்தச் சுடுகாடு பயன்படுத்தப்படாமல் காலி இடமாக உள்ளது. இந்த இடத்தில் திருப்பத்தூரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் குப்பைகள் கிருஷ்ணகிரி மெயின் ரோடு சுடுகாட்டுக்கு வெளியே மலை போல் குவிந்துள்ளது. இந்தக் குப்பைகள் மழை, வெயிலில் மக்கி துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. உடனடியாக நகராட்சி சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-எஸ்.ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்