ஓடைகளில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-09-03 16:45 GMT

வேட்டவலம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை வாகனத்தில் எடுத்து வந்து, வேட்டவலம் பெரிய ஏரிக்கு வரும் நீர்வரத்து ஓடைகளில் கொட்டுகின்றனர். இதனால் ஓடைகளின் வழியாக பெரிய ஏரிக்கு வரும் தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. மழைக்காலத்தில் ஏரிக்கு தண்ணீர் வராமல் போகும் நிலையும் ஏற்படலாம். எனவே நீர்வரத்து ஓடைகளில் குப்பைகளை கொட்டுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

-அன்பு, வேட்டவலம்.

மேலும் செய்திகள்