வேலூர் கோடையிடி குப்புசாமி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் அருகே ஆற்காடு சாலையோரம் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை உடனுக்குடன் சேகரிக்க வேண்டும்.
-சரவணன், வேலூர்.