தூர்வாரப்பட்டது

Update: 2026-07-19 07:27 GMT

மருங்கூரில் பிரதான சாலையோரம் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக தூர்வாரி பராமரிக்காததால் குப்பைகள் தேங்கி கழிவுநீர் வடிந்தோடாமல் காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருந்தது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருந்தது. இதுபற்றி ‘தினதந்தி புகார்பெட்டி’யில் செய்தி படத்துடன் வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட வழி செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

-சுபாஷ் தாணப்பன், மருங்கூர்.

மேலும் செய்திகள்