மதுரை கோ.புதூர் பகுதியில் உள்ள கோசாகுளம் கண்மாயில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் அதிளவில் கலக்கின்றன. மேலும் சிலர் இறைச்சி கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர். இதனால் கண்மாயில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நீர்நிலை முற்றிலுமாக மாசடைகிறது. துர்நாற்றத்தால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றவும், நீர் நிலையை பராமரிக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?