சுடுகாட்டு சாலையில் இறைச்சி கழிவுகள் வீச்சு

Update: 2024-02-04 17:13 GMT

வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட கரிக்கல் மலையையொட்டி சுடுகாடு சாலையிலேயே இறைச்சி கழிவுகளை மூட்டையாக கட்டி கொண்டு வந்து வீசுகிறார்கள். சுடுகாட்டில் உள்ள நாய்களும், பன்றிகளும் மூட்டைகளை கிழித்து இறைச்சி கழிவுகளை சாப்பிடுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுடுகாட்டுக்கு இறந்தவரின் உடலை கொண்டு வருவோர் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் இறைச்சி கழிவுகளை வீசுவோரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகம், கரிக்கல். 

மேலும் செய்திகள்