ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்

Update: 2022-11-20 10:53 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் மூக்கனூர் ஊராட்சியில் ஏரி கொட்டாய் பகுதியில் ஏரி உள்ளது. அந்த ஏரியில் தற்போது பெய்த மழையால் நீர் நிரம்பி வழிகிறது. ஏரியில் குப்பைக் கழிவுகளை கொட்டி வருகிறார்கள். இதனால் ஏரியின் நீர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி ஏரியில் வாழக்கூடிய மீன் போன்ற உயிரினங்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஏரியில் குப்பைக் கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-துளசி, சின்னமூக்கனூர்.

மேலும் செய்திகள்