வாணியம்பாடி காதர்பேட்டை போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் குப்பைகளை கொட்டி அப்புறப்படுத்தாமல் இருப்பதாலும், மாட்டிறைச்சி கழிவுகளை அதிகளவில் கொண்டு வந்து கொட்டுவதாலும் துர்நாற்றம் வீசுகிறது. நாய்களும் இதனை கிளறுகின்றன.
எனவே, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடை செய்தும், குப்பைகளை வேறு இடத்தில் கொட்டவும் நடவடிக்கை எடுப்பாா்களா?