மதுரை ஒத்தக்கடை அன்பு நகர் பகுதி சாலையின் இருபுறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு அதிகளவில் குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும், துர்நாற்றம் காரணமாக அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?