விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி சுகாதார சீர்கேடை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வாறுகாலில் தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.