மாணவ, மாணவிகள் அவதி

Update: 2026-03-08 14:43 GMT

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியில் அரசு பழங்குடியின உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மலைவாழ் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி சுற்றுச்சுவர் அருகே இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி அலுவலத்தில் கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்