கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் சாக்குகள், பஞ்சுகள் உள்ளிட்ட குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இவை காற்றில் பறந்து சாலையில் வந்து விழுகின்றன. மேலும் குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைக் கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.