பள்ளிபாளையத்தில் உள்ள ஆவத்திபாளையம் பஸ் நிலையம் அருகே ஒரு ஓடை இருக்கிறது. இந்த ஓடை மீது உள்ள பாலத்தின் அடியில் இந்த பகுதி கடைக்காரர்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். குப்பைகள் சேர்ந்தவுடன் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியில் உள்ள சிலர் அந்த குப்பைக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால் கடுமையான புகை எழுந்து அப்பகுதி முழுவதும் பரவுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து பாலத்துக்கு அடியில் குப்பைகள் கொட்டாதபடி வேலி அமைக்க வேண்டும்.