குப்பைகளுக்கு தீ வைக்கும் அவலம்

Update: 2024-01-21 17:32 GMT

சோளிங்கர் பஞ்சு மில் அருகில் குடியிருப்பு பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை வீரானத்தூர் செல்லும் சாலையையொட்டி மலைப்பகுதியில் கொட்டி, தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தீயில் இருந்து வெளியேறும் புகை, அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்