குப்பைகளுக்கு தீ வைக்கும் அவலம்

Update: 2022-10-09 10:44 GMT

ஆரணி கொசப்பாளையம் அப்பர் தெரு முகப்பிலும், அம்பேத்கர் நகர் செல்லும் வழியிலும் அதிகளவில் குப்பைகள் தேங்கி கிடப்பதாலும் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றாததாலும் குப்பைகள் காற்றில் பறந்து செல்கிறது. அந்தக் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். நகராட்சி ஊழியர்கள் உடனடியாக குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

-ராகவன், ஆரணி. 

மேலும் செய்திகள்