குப்பைகளை எரிப்பதால் பாதிப்பு

Update: 2023-07-02 13:49 GMT

குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காட்பாடி ரோடு ஸ்வஸ்திக் நகர் பகுதியில் பாழடைந்த கிணறு உள்ளது. அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் கொண்டு வந்து கிணற்றில் கொட்டி தினமும் தீ வைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து எழும் நச்சுப்புகை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வாசுதேவன், குடியாத்தம்.

மேலும் செய்திகள்