கம்பம் புறவழிச்சாலையில் கட்டிட கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டிட கழிவுகள் சாலையை ஆக்கிரமிப்பதால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே இறைச்சி, கட்டிடக்கழிவுகளை விரைந்து அகற்ற வேண்டும்.