குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2026-06-07 16:49 GMT

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் விநாயகர் கோவில் வீதி உள்ளது. அங்கு போக்குவரத்து அதிகம் இருப்பதால் அந்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் அந்த சாலையோரம் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது.

ேமலும் குப்பைகளில் இரை தேடவரும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு வாகனங்கள் மீது மோதி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். அப்பகுதியில் ஈக்கள் அதிக அளவில் இருப்பதால் பல்வேறு தொற்று நோய் பரவி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், காமநாயக்கன்பாளையம்.

மேலும் செய்திகள்