சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

Update: 2026-06-07 15:41 GMT

அரூர்-திருவண்ணாமலை செல்லும் சாலையில் வனப்பகுதியில் முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை சாக்கு மூட்டைகளில் கட்டி சாலை ஓரத்தில் கொட்டப்படுகின்றன. அவற்றை குரங்குகள் பிரித்து எறிவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே வனப்பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்