குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2026-06-07 16:12 GMT

குமாரபாளையம் நகராட்சியில் ராஜம் தியேட்டர், சுந்தரம் காலனி, மேற்கு காலனி வழியாக காவிரி ஆற்றங்கரைக்கு சாக்கடை கழிவுநீர் கோம்பு பள்ளத்தில் செல்கிறது. இந்த கோம்பு பள்ளத்தில் பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் போன்ற குப்பை கழிவுகளால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. கோம்பு பள்ளம் அருகே சுமார் 500 குடியிருப்புகள் உள்ளன. குப்பைகள் தேங்கி கிடப்பதால் சாக்கடை கழிவுநீர், மழைநீர் கலந்து குடியிருப்பு பகுதியில் செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் அபாயம் உள்ளது. மேலும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே கோம்புபள்ளத்தை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்