குப்பை கொட்டும் இடத்தை மாற்ற வேண்டும்

Update: 2022-07-19 10:49 GMT



கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் தினமும் துப்புரவு, தூய்மைக் காவலர்கள் வீடு வீடாக சென்று வண்டிகளில் குப்பைகளை சேகரிக்கின்றனர். அந்தக் குப்பைகளை எடுத்துச் சென்று திருவண்ணாமலை மெயின்ரோட்டில் உள்ள வளமீட்பு பூங்காவில் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுகிறார்கள். மக்காத குப்பைகளை மலைபோல் குவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை உள்ளது. எனவே குப்பை கொட்டும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-சத்தியசீலன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்