குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை

Update: 2022-08-04 15:11 GMT

வாணியம்பாடி- ஆலங்காயம் செல்லும் சாலையில் நேதாஜி நகர் அருகே உள்ள ஜல்லி மெஷின்மேடு பகுதியில் சாலை ஓரத்திலேயே குப்பைகளையும், கோழி இறைச்சி கழிவுகளையும் கொட்டுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

அஸ்லம், வாணியம்பாடி

மேலும் செய்திகள்