குப்பை மேடாக மாறும் கழிவுநீர் கால்வாய்

Update: 2024-06-23 17:52 GMT

வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலை அருகே கூடுதல் ஆட்சியர் பங்களா உள்ளது. இங்கு செல்லும் கழிவுநீர் கால்வாயில், பொதுமக்கள் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் கால்வாய் குப்பை மேடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கவும், குப்பை கொட்டாமல் தவிர்க்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தினகரன், வேலூர். 

மேலும் செய்திகள்