மயிலாடுதுறை மாவட்டம் வடகரை ஜவஹர் தெருவிற்கும், இக்பால் தெருவிற்கும் இடையில் உள்ள இணைப்பு சாலையில் குப்பைகள் அள்ளப்படாததால் சாலையில் குப்பைகள் சிதறிக்கிடக்கிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜவஹர் தெரு வடகரை.